Saturday, July 30, 2011

பொது அறிவுப் புதையல்

*மகாராஷ்டிரத்தின் பண்பாட்டுத் தலைநகர் புனே.
*தேவகியின் எட்டாவது குழந்தை கண்ணன்.
*பத்து ரூபாய் நோட்டில் ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்து இருக்கும்.
*அல்ஜீப்ரா குறித்த விளக்க நூல் லீலாவதி.
*உலகில் உள்ள நீரில் 97% கடலில் உள்ளது.
*ஷெர்லாக் ஹோம்ஸ் நூலின் ஆசிரியர் சர். ஆர்தர் கானன்டாயிலின்.
*குஜராத்தின் தலைநகரம் காந்திநகர்.
*செல்சியஸ் என்பதும் சென்டிகிரேடு என்பதும் ஒரே அளவு தான்.
*இந்தியாவின் மிகப் பெரிய நதி கங்கை.
*இதுவரை புக்கர் பரிசு பெற்ற ஒரே இந்தியர் அருந்ததிராய்.
*தாவர எண்ணெயை வனஸ்பதியாக மாற்றுவது ஹைட்ரஜன்.
*மூளை இறந்த பின்பும் கூட இதயம் துடித்துக் கொண்டிருக்கலாம்.
*முதுகெலும்பில் 33 எலும்புகள் உள்ளன.
*காவிரி ஆறு குடகு மலையில் உருவாகிறது.
*"தத்துவ ஞானிகள் ஆட்சியாளர்களாக வேண்டும்" என்று கூறியவர் 
   பிளாட்டோ.
*"சீன நாகரிகத்தின் தொட்டில்" என்று அழைக்கப்படும் ஆறு மஞ்சள் ஆறு.
*பாண்டியர்கள் இடைச் சங்க காலத்தில் தலை நகரமாகக் கொண்ட நகரம் 
  கபாடபுரம்.

No comments:

Post a Comment